Sep 29, 2015

சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது

 சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்கள்  2,200 பேர்  பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்த முடிவு

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 4 கோடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஎன வருமான வரித்துறை துணை ஆணையர்(புலனாய்வு) ஸ்ரீதரன் கூறினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலையில் போட்டி தேர்வுமாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

Educational Loan

உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் போராட்டம் உறுதி

 சென்னை, தி.நகரில் உள்ள தமிழ்நாடு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் சங்க அலுவலகத்தில், 'ஜாக்டோ' உயர்மட்ட குழு கூட்டம், நேற்று நடந்தது. பின், 'ஜாக்டோ' ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: 

அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை:அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்

 மத்திய அரசு வழங்கியதுபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கட்டாய தலைக்கவச உத்தரவு: மறுபரிசீலனை செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கட்டாய தலைக்கவச உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரும் சீராய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கட்டாய தலைக்கவச உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை கணக்கிட, 'ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர்'

           
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, தொழிற்சாலை, ஜவுளி ஆலை, ஐ.டி., நிறுவனங்கள் என, 8,200 உயரழுத்த மின் இணைப்புகள் உள்ளன. 
இவற்றில், தற்போது, 'டைம் ஆப் டே' என்ற மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டரில் ஒவ்வொரு, 15 நிமிடமும் பயன்படுத்திய மின்சார அளவு பதிவாகும்.உதவி பொறியாளர், மாதந்தோறும், நேரடியாக சென்று, மின் பயன்பாட்டை கணக்கு எடுப்பார். ஏழு நாட்களுக்குள், மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். 

Sep 12, 2015

தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளிக்க மாவட்டத்துக்கு 4 பேர் பரிந்துரை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களில் 400 பேருக்கு மட்டும் தலைமைப் பண்பு பயிற்சி சென்னையில் அளிக்கப்பட உள்ளது.இதை அனைவருக்கும் கல்வி இயக்கமும், மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளன.

கூடுதல் 'செக்யூரிட்டி டிபாசிட்' செலுத்தாத 1 லட்சம் மின் இணைப்பு துண்டிப்பு?

தமிழகத்தில், ஒரு லட்சம் மின் நுகர்வோர், 'அடிஷனல் செக்யூரிட்டி டிபாசிட்' என, அழைக்கப்படும், கூடுதல் காப்பு வைப்பு தொகையை, மின் வாரியத்திற்கு செலுத்தவில்லை. அதனால், அவர்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளி கல்லூரிகளில் பாடமாகும் ராமாயணம், மகாபாரதம்!

உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சார பெருமைகளை, இளம்தலைமுறைகளின் மனதில் பதிய வைக்கும் வகையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையை ஒரு பாடமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா 

ஆதார் பதிவை டிசம்பருக்குள் முடிக்க தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க முடிவு:

 சென்னையில் 5 இடங்களில் திறப்பு
            தமிழகத்தில் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு செய்யும் பணியை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.


பாரதியார் பல்கலையில் குரூப் 1 தேர்வு பயிற்சி

        தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பாரதியார் பல்கலையில் அக்., மாதம் நடக்கிறது. துணை கலெக்டர், டி.எஸ்.பி, உதவி ஆணையர் வணிகத்துறை, மாவட்ட பதிவாளர் உட்பட, தமிழகத்தில் காலியாக உள்ள, 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள், நவ.,11ம் தேதி நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 2 லட்சத்து 41 ஆயிரத்து, 971 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

வாட்ஸ் அப்பின் இருபது கோடி பயனாளர்களை மிரட்டும் ஹேக்கர்கள்

பிரபல செயலியான வாட்ஸ்-அப்பை சுமார் 20 கோடி பேர் தமது மொபைல்களிலும்தனிநபர் கணினிகளிலும் அனுதின மெஸேஜ்கள் அனுப்ப பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இதன் மொபைல் செயலியில்மொபைல் நம்பரைக் கொண்டு ஹேக்கர்கள் சுலபமாகஅவர்களது போனுக்குள் வைரஸ்களை அனுப்பும் அபாய நிலை இருந்தது.

SSA திட்டம்: மத்திய அரசு நிதி 50% ஆகக் குறைகிறது

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான (சர்வ சிக்ஷா அபியான்) தனது நிதிப் பங்களிப்பை 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?

          ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.    இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்?

Sep 10, 2015

பி.எட்., விண்ணப்பம் இன்று கடைசி நாள்



          தமிழகத்திலுள்ள, 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில், 2,200 பி.எட்., இடங்களை நிரப்ப, 3ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இன்று பிற்பகல், 3:00 மணி வரை மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

11,000 மாணவர்களுக்கு அறிவியல் விருது மத்திய அரசு ரூ.2.40 கோடி ஒதுக்கீடு

நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் விருது வழங்க, மத்திய அரசு, 2.40 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடத்தி, 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது.மாவட்ட விருதுக்கு, 2,000 ரூபாய்; மாநில விருதுக்கு, 2,500 ரூபாய் மற்றும் சான்றிதம் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு பெறுவோர், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் குளறுபடி?


        டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்ததில், குளறுபடிகள் நடந்துள்ளதாக, ஆசிரியர் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ண னின் பிறந்த நாளான, செப்டம்பர், 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள்: செப். 14 முதல் பள்ளிகளுக்கு விநியோகம்


        ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ புத்தகங்கள் வருகிற 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: செப். 21 முதல் 23 வரை அறிவியல் செய்முறைத் தேர்வு

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

காதல் திருமணம் செய்த ஆசிரியர் பாடம் நடத்த அனுமதி மறுப்பு


           சென்னை, ராயபுரத்தில், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது; இங்கு, ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர், அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியையை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு, பள்ளி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருமணத்துக்குப் பின், அந்த ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆசிரியருக்கு, பள்ளி நிர்வாகம் பணி மாறுதலும் அளிக்கவில்லை; மாறாக, 100 நாட்களாக பள்ளியில் பாடம் நடத்த, அனுமதி மறுத்துள்ளது; தினமும், பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, செல்லும்படி கூறியுள்ளது.

நெல்லை அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அவமான படுத்திய மாணவர்கள் 2 பேர் டிஸ்மிஸ்

நெல்லை அருகே உள்ள கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல் நிலைப்பள்ளியில் 1,087 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகிக்கு புகார் வந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளியின் சுற்று சுவரை சில மாணவர்கள் உடைத்துவிட்டனர். இதனால் இன்று காலை மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகி கயத்தாறு பள்ளிக்கு விசாரணைக்கு சென்றார்.

Flash News: 6% அகவிலைப்படி உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீத உயர்வுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.கடந்த ஏப்ரலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா

 தமிழக அரசு கடனில் சிக்கித் தவிப்பதாக தேமுதிக தலைவர் விஜய்காந்த் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பத்தாம் வகுப்பு அறிவியல் செயல்முறை துணைத்தேர்வு

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வானது அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் வரும் செப்.,21 முதல் செப்.,23 வரை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி; தேர்வு நேரத்தில் மாணவர்கள் பாதிப்பு

அரசு பள்ளிகளில் முதல்பருவத்தேர்வு துவங்கும் நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் உருவாகியுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, வரும், 12ம் தேதி முதல் காலாண்டு தேர்வு துவங்குகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, செப்.,19ம் தேதி முதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

என்.எல்.சி., விரிவாக்கப் பணிக்காக பள்ளி மூடல்

கெங்கைகொண்டானில் என்.எல்.சி., விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதால், அங்கு இயங்கிய ஊராட்சி துவக்கப் பள்ளியைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்கள் பிள்ளைகளை எங்கு சேர்ப்பது என தெரியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

பள்ளிக்கு போகாமலேயே பட்டம் வாங்கிய பெண்!

ராஜஸ்தானில், பச்சிளம் பருவத்தில் தாயை இழந்த மகளை, பள்ளி, கல்லுாரிக்கு அனுப்பாமல், தன் சொந்த முயற்சியில் பாடம் கற்பித்து, எம்.ஏ., பட்டம் பெறச் செய்த தந்தையின் செயல், அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

Sep 9, 2015

தமிழகத்திலும் பி.எட். படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது.

குரூப் 3, 4 பணிகளுக்கு நேர்காணல் ரத்து, மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

துறை வாரியாக எழுத்துத் தேர்வு நடந்த பிறகு தேவைப்படும் பணிகளுக்கு மட்டும் நேர்காணல் நடத்தப்படும். கடைநிலை பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள், பொதுத் தேர்வு ஆணையம், அரசு ஊழியர் தேர்வு ஆணையம் ஆகியவற்றிற்கு தகவல் அனுப்பி உள்ளோம்.

பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைவு: மென்பொருள் மூலம் கண்காணிப்பு

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் குறைந்துள்ளது.அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி,

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 143 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் நிரப்பப்பட உள்ள 143 தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இனி மின் இணைப்பு பெறுவது சுலபம்: விரைவில் இணையதள விண்ணப்ப வசதி

இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அலைச்சல் இல்லாமல், சுலபமாக புதிய மின் இணைப்பு பெறும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைக்கிறார்.தமிழகத்தில், பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி சான்றிதழ் மற்றும் கடை துவக்குவதற்கான அனுமதி போன்றவற்றை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம், மக்கள் அலைச்சல் இல்லாமல், தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை, உரிய கட்டணம் மட்டும் செலுத்தி, சுலபமாக பெறுகின்றனர்.

TNPSC: புள்ளியியல் உதவி இயக்குனர் ரிசல்ட்

புள்ளியியல் உதவி இயக்குனர் பணிக்கான, இரண்டாவதுதேர்வுபட்டியலை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.தமிழக புள்ளியியல் துறையில், 51 இயக்குனர் பணியிடங்களுக்கு, 2014 பிப்ரவரியில் தேர்வுநடந்தது.

TNPSC: தோட்டக்கலை அதிகாரி தரவரிசை

தமிழக வேளாண் துறையில், தோட்டக்கலை துறை அதிகாரிபதவிக்கான, 183 காலியிடங்களுக்கு, 2013 ஜூலையில் தேர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச்சில் எழுத்துத் தேர்வு நடந்தது.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, கடந்த ஜூனில் நடந்தது.இந்நிலையில்,

DA: அகவிலைப்படி உயர்வு: இன்று பரிசீலனை?

தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசுஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் கட்டணமின்றி அக்டோபர் 1ம் தேதி முதல் குறைந்தபட்சம் 2 எம்பி வேகத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்

பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 2014 மார்ச் முதல் கடந்த மார்ச் வரை சுமார் 1.98 கோடி சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதில் லேண்ட் லைன்  இணைப்பில் மட்டும் 20 லட்சம் பேர் குறைந்துள்ளனர். எனவே, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில்,

Sep 8, 2015

செய்முறை வழிகாட்டி வராததால் 10 ம் வகுப்பு ஆசிரியர்கள் தவிப்பு

பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் 10 ம் வகுப்பு வழிகாட்டிவராததால், ஆசிரியர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வும், 25 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும் எழுத வேண்டும்.

நாகை, நாமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று(08-09-15)உள்ளூர் விடுமுறை அளித்து நாகை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏர்வாடிதர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


இன்றைக்குப் பதில் செப்.,19ம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்காணல்: திருநங்கையை அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வில் திருநங்கையை அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

ஒப்பந்த ஆசிரியர் நியமனம் அணுமின் நிலையம் ஏற்பாடு.

கல்பாக்கம் சுற்றுப்புற பகுதி அரசு பள்ளிகளில், காலி பணியிடங்களில்,தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, சென்னை அணுமின் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. கல்பாக்கம் சுற்றுப்புற கிராமங்களில் இயங்கி வரும் பள்ளிகளில், அறிவியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வந்தது.

பள்ளி மாணவர்களுக்கான கடிதப் போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதப் போட்டியை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய புள்ளியியல் பணி தேர்வில் அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி மாணவர் சாதனை

மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய புள்ளியியல் பணித்தேர்வில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

பிளஸ் 2 துணை தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்

       பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மழை பெய்யலாம் குடையுடன் போங்க!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
வெப்பச் சலனத்தால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில், மாலை அல்லது இரவு நேரத்தில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

ஆதார் எண் கொடுத்தால்தான் பேராசிரியர்களுக்கு ஊதியம்! கல்லூரிகள் எச்சரிக்கையால் சிக்கல்

 உச்ச நீதிமன்றம் "ஆதார் எண் கட்டாயமல்ல' எனக் கூறி வந்தபோதிலும், ஆதார் எண் கொடுத்தால்தான் ஊதியம் என சில தமிழக பொறியியல் கல்லூரிகள் கூறியிருப்பது பேராசிரியர்களிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வயது குறைப்பு

மத்திய அரசின், தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஜன., 12ம் தேதி, விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக நலன் மற்றும் தேச வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படும், தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அஞ்சல் வழிக்கல்வி நுழைவுத் தேர்வு 'ரிசல்ட்'

அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வி மையம் மூலம் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், எம்.பி.ஏ., சேருவதற்கான, தொலைதுாரக் கல்வி நுழைவுத் தேர்வு, ஆகஸ்ட், 30ல் நடந்தது.

Sep 7, 2015

ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளி இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல்.

இந்திய வம்சாவளி சிறுமி லிடியா பாஸ்டின்(12), லண்டனில் நடைபெற்ற 'மென்ஸா அறிவுக்கூர்மை போட்டியில் 162 புள்ளிகள் பெற்று, இயற்பியல் வல்லுனர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை பின்னுக்குதள்ளி முதலிடம் பெற்றார்.

ஆய்வக வசதி இல்லாத அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள்: செய்முறைத் தேர்வுக்கு மாணவர்கள் தனியார் கல்லூரிகளுக்கு செல்லும் பரிதாபம்

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அடிப்படை ஆய்வக வசதிகள் இல்லாமல்செயல்பட்டு வருவதால் அங்கு படிக்கும் மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு அருகேயுள்ள தனியார் கல்லூரிகளின் தயவை நாட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மிக விரைவில்?

தமிழகம் முழுவதும் உள்ள 900 காலி பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பணி மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ளனர்.

TNPSC Group 2 A - 1700 Post ,VAO-800 Post, Group 4- 2800 பணியிடம் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது

        டி.என்.பி.எஸ்சி  நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2 பணியிடம் 1700 பணியிடங்களும் வீஏஓ 800 பணியிடங்களும் குரூப் 4 2800 பணியிடங்களுக்கும் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது. இதில்

விரைவில் 900 ஆசிரியர்கள் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

         புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள 900 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்ற அவர், 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

ஆதார் எண் இருந்தால் தான் இலவச 'லேப் - டாப்'

       'கடந்த ஆண்டுகளில், கணக்கு குளறுபடி ஏற்பட்டுள்ளதால், ஆதார் எண் இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக, பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியருக்கு, இலவச லேப் - டாப் வழங்கி வருகிறது.

சிவில் சர்வீசஸ் தேர்வு அரசு இலவச பயிற்சி

        சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு, இலவசப் பயிற்சி பெற, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், நுழைவுத்தேர்வு அறிவித்துள்ளது.

ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு

     புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திங்கள்கிழமை (செப்டம்பர் 7) திறக்கப்படுகிறது. புதிய கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளார்.

அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் 2 மடங்கு மாணவர்கள்!

   மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

பிஎப் சந்தாதாரர்களுக்கு அதிகபட்ச காப்பீடு ரூ.5.5 லட்சமாக உயர்கிறது

        பிஎப் காப்பீடு தொகை ரூ.5.5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ), 6  கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. தற்போது தொழிலாளர் டெபாசிட் தொகையுடன் இணைந்த காப்பீடு திட்டத்தில் அதிகபட்ச காப்பீடு ரூ.3.6 லட்சமாக உள்ளது.

அக்.8 -ல் திட்டமிட்டபடி ஆசிரியர்கள் கூட்டுக்குழுவின் வேலை நிறுத்தம்

         ஜேக்டோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி அக்.8 -ஆம் தேதி நடைபெறும் என்றார் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் க. மீனாட்சிசுந்தரம்.புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற மாநில விரைவுச் செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியார்களிடம் மேலும் கூறியது:

அரசு பள்ளி கட்டடங்களில் மின்னுற்பத்தி: மத்திய அரசு அறிவுறுத்தல்

அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்த சுற்றறிக்கை மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளுக்கும் பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

Sep 6, 2015

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும்; ஐகோர்ட்டு உத்தரவு

          ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை;மாணவர்களைக் கண்காணிக்க குழு

கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் ஜாதிய மோதல் தலை துாக்கியுள்ளது. இதனைத் தவிர்த்திட மாவட்ட நிர்வாகம், போலீஸ் மற்றும் பள்ளி கல்வித் துறை இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களிடையே ஏற்படும் சிறு, சிறு பிரச்னைகளை ஆரம்பத்திலேயே களைந்திட வசதியாக அனைத்து பள்ளிகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க கடலூர் முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.

 

கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது-பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2014-15-ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெற்றது.