இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு
வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில்
நிரப்பப்பட உள்ள 143 தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தபால்காரர் - 143
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட
கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: மெயில்கார்டு: 01
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட
கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர
ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 04.10.2015 தேதியின்படி 18
- 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி
தேதி: 11.09.2015
மேலும், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள்,
வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள்
அறிய www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment