Sep 8, 2015

மழை பெய்யலாம் குடையுடன் போங்க!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
வெப்பச் சலனத்தால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில், மாலை அல்லது இரவு நேரத்தில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.



        பொதுவாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும் மழை பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த, 24 மணி நேரத்தில், தேனி, பெரியகுளத்தில், அதிகபட்சமாக, 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment