Aug 22, 2015

kalviseithi | பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு.

அரசு கல்லுாரிகளில் பணி செய்யும், 2,000 பேராசிரியர்களுக்கு, 3 மாதம் ஊதியம் வழங்கப்படாததால், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.


 தமிழக அரசு கல்லுாரிகளில், 8,000 பேராசிரியர்கள் பணியாற்று கின்றனர். இவர்களில், 2,000 பேர் கவுரவ பேராசிரியராக கணிதம், அறிவியல், வரலாறு, பொருளியல் போன்ற பாடங்களுக்கு, நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக, மாதம், 1௦௦௦௦ ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த ஊதியம்,கடந்த  மூன்று மாதங்களாக தமிழக அரசால் வழங்கப்படவில்லை. இதனால், கவுரவ பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்பிரச்னை தொடர்பாக உயர்கல்வி முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கு பல மனுக்கள் அளித்தும் பலன் அளிக்கவில்லை. எனவே, 2,000 பேராசிரியர்களும் மொத்தமாக வகுப்பை புறக்கணிக்க திட்டமிட்டு உள்ளதாக, கல்லுாரி பேராசிரியர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment