பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை: மது ஒழிப்பு உள்ளிட்ட
போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தற்ப்போது அதிகமாக மதுவிலக்கு அமல் செய்யக்கோரியும், பல்வேறு காரணங்களை முன் வைத்தும் நடத்தப்படும் போராட்டங்களில், அரசியல் கட்சிகள், நலச்சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்க்கின்றனர்.ஆனால் தற்ப்போது பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பங்கேற்பது வழக்கமாகி விட்டது. அவ்வாறு பங்கேற்பதை
தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து
வருகிறது.
கல்லுாரி,பள்ளி மாணவர்கள், போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்தும், மீறி பங்கேற்றால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்
மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பள்ளிகளில் நடக்கும் இறைவணக்கம்
கூட்டங்களில், மாணவர்களுக்கு தகுந்த முறையில் அறிவுரை
வழங்கும்படியும், இயக்குனரது உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment