Aug 22, 2015

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கணினி மூலம் வருமான வரி 80 வயதினருக்கு உத்தரவு

 கணினி மூலம் வருமான வரி கணக்கை,  80 வயது உட்பட்டோருக்கு கட்டாயம்' என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை


இந்த ஆண்டில், வரும், 31ம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆண்டு வருமானம் 500000  ரூபாய்க்கு மேல், உள்ள 80 வயதுக்கு உட்பட்டவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது, கூடுதல் வரி செலுத்தி திரும்ப பெறுவது போன்றவற்றை, அனைத்தும் கணினி மூலமே செய்ய வேண்டும்.

 சென்னை வருமான வரி அலுவலக எல்லைக்குள் இருப்பவர்கள், நுங்கம்பாக்கம் வருமான அலுவலகத்திலும், தாம்பரம் அலுவலக எல்லைக் குள் இருப்பவர்கள், தாம்பரம் வருமான வரி சேவை மையத்திலும், கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment