Aug 19, 2015

பள்ளி கல்வித்துறை புது உத்தரவு: மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில்மாணவர்கள் ஈடுபடக்கூடாது

மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபடக்கூடாது' என, பள்ளி கல்வித்துறை புது உத்தரவு போட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டங்களில் பள்ளி மாணவ, மாணவியர்  ஈடுபடுவதால் கல்வி பாதிக்கிறது. . கல்வி பாதிக்காமல் தவிர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்குஉள்ளது.இதுபோன்ற போராட்டங்களில், பங்கேற்கக்கூடாது என, மாணவ - மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும். பிரார்த்தனை கூட்டங்கள்,  பாட வேளைகளில், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment