TNPSC Group 2 நேரடி நியமனக் கலந்தாய்வு
வரும் ஆகஸ்ட் 24ல் தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
தெரிவித்துள்ளது.
1,136 காலிப்பணியிடங்களை நிரப்ப நேர்காணலில்
கலந்து கொண்ட அனைத்து 2,222 விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வில்
கலந்து கொள்ள தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணைய அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இப்பதவிகளுக்கான முதல்
எழுத்துத் தேர்வு, 08.11.2014 ,09.11.2014 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்றது. நேர்காணல் 15.07.2015 முதல் 08.08.2015 வரை நடைபெற்றது. எழுத்துத் தேர்வு
மற்றும் நேர்காணல் தேர்வில், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள்
பட்டியல் 10.08.2015 அன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக்கடிதம்,
குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக
நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்புக்கடிதம் வரப்பெறாதவர்கள் அதனை தேர்வாணைய
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு வருகைதரத் தவறும்பட்சத்தில்
விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காது.
No comments:
Post a Comment