May 14, 2017

குரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு.| kalvisethi news

  குரூப் - 1 தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:துணை கலெக்டர் -19;
டி.எஸ்.பி., - 26-, வணிகவரித் துறை உதவி கமிஷனர் - 21 மற்றும் மாவட்ட பதிவாளர் - எட்டு என, 74 காலி பணியிடங்களுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலையில் நடந்தது. இதில், 2,926 பேர் பங்கேற்றனர். இவர்களில், 148 பேர், மதிப்பெண், விதிகள் அடிப்படையில், தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இது குறித்த விபரங்கள், www.tnpsc.gov.in இணையதளத்தி-ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன், 5 முதல், 9 வரை நடக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment