Mar 16, 2017

தமிழக பட்ஜெட் 2017-18: முக்கிய செய்திகள் உடனுக்குடன்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழக நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

   நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் இங்கே உடனுக்குடன்....

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

ஊரக சாலை மேம்பாடு திட்டத்துக்கு ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு.

பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

நகர்ப்புற மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு.

***

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

கல்லூரி விடுதி மாணவர் உணவுப்படி ரூ.875ல் இருந்து ரூ.1000 ஆக உயர்வு.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் உதவித் தொகை ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.26,932 கோடி. சுகாதாரத் துறைக்கு ரூ.10,518 கோடி ஒதுக்கீடு.

கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.497 கோடி.

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்.



***

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் கிராமப்புற கோயில்களை புதுப்பிக்க கோயில் ஒன்றுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும்.

புதுப்பிக்கப்படும் கோயில்களின் எண்ணிக்கை 500ல் இருந்து 1000 ஆக உயர்வு.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 200 ஆவின் பாலகங்கள் நிறுவப்படும்.

காற்றாலை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்க சிறப்பு பசுமை மின் வழித்தடம் அமைக்கப்படும்.

விவசாயம், இதர பயன்பாட்டுக்கான மின்சார மானியத்துக்கு ரூ.8,538 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதய் திட்டத்தின் கீழ் வட்டித் தொகை செலுத்தி வருவதால் கூடுதல் இழப்பு

வீட்டு மின் நுகர்வோருக்கு 100 யுனிட் இலவசமாக வழங்கப்படுவதால் மேலும் இழப்பு.

புனல் மின் நிலையங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உதய் மின் திட்டம் மூலம் ஏற்பட்டுள்ள கடன் சுமையை சமாளிக்க கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு.

உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததால் ரூ.1,335 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும்.

***

நெடுஞ்சாலைத் துறைக்கு 115 கி.மீ. தூர மாநில நெடுஞ்சாலைகளும், 107 கி.மீ. நீளமுள்ள மாவட்ட சாலைகள் ரூ.160 கோடி செலவிலும் அகலப்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 1000 கி.மீ. தூரத்துக்கு சாலை அகலப்படுத்தப்படும். இதற்கு 3,100 கோடி நிதி ஒதுக்கீடு.

சாலைப் பாதுகாப்புக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

***

சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தப்படும்.

காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டு மாடுகளை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கும்.

நீர்நிலைகளை குடிமக்களின் ஒருங்கிணைப்போடு தூர்வாரும் மராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆவின் நிறுவனத்தின் சராசரி உற்பத்தி 2016ம் ஆண்டில் 40.22 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

ரூ.40 கோடி செலவில் மதுரையில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும். இங்கு நறுமண பால் தயாரிக்கும் பணிகள் நடைபெறும்.

நீர்வள நிலவள திட்டம் ரூ.3,042 கோடியில் செயல்படுத்தப்படும்.

25 கால்நடை கிளை மையங்கள் கால்நடை மருந்தகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனையாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 25 புதிய கால்நடை கிளை மையங்களையும் அரசு அமைக்கும்.

ஆவின் நிறுவனத்தின் சராசரி உற்பத்தி 2016ம் ஆண்டில் 40.22 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

ரூ.40 கோடி செலவில் மதுரையில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும். இங்கு நறுமண பால் தயாரிக்கும் பணிகள் நடைபெறும்.

****

ஏழைப் பெண்களக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் குடும்பங்களுக்கு 6 லட்சம் ஆடுகளும் வழங்கப்படும்.

ஊரக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ.469 கோடி ஒதுக்ககீடு.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறுந்தொழில் நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை.

***

பால்வளத்துறைக்கு ரூ.130 கோடியும், மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ.3,14,366 கோடி கடன் உள்ளது.

கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.497 கோடி ஒதுக்கீடு.

சுற்றுச்சூழல் வனத்துறைக்கு ரூ.587 கோடி ஒதுக்கீடு.

கூடுதலாக 120 வட்டாரங்களில் புது வாழ்வு திட்டம்.

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு.

நடப்பாண்டில் 39 லட்சம் ஏக்கர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய நடவடிக்கை.

***

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் காலியாக உள்ள காவல் இளைஞர் பணியிடங்களுக்கு 10,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று ஜெயக்குமார் அறிவித்தார்.

காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

நடப்பாண்டில் ரூ.30 கோடி செலவில் கூடுதலாக 29 காவல்நிலையங்கள்
காவல்துறை நவீனமயமாக்க ரூ.6,483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வாகனங்களையும், தகவல் தொலைத் தொடர்பு கருவிகளையும் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு.

குற்றவாளிகளை சீர்திருத்தும் அமைப்புகளாக திகழும் சிறைச்சாலைத் துறைக்கு ரூ.282 கோடி ஒதுக்கீடு.

நிதி நிர்வாகத்தக்கு ரூ.984 கோடி ஒதுக்கீடு.

நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

****

நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.272.12 கோடி ஒதுக்கீடு.

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.

கோவை, மதுரை, திருச்சியில் இந்திய பன்னாட்டு திறன்பயிற்சி மையங்கள் திறக்கப்படும்.

கால்நடை பராமரிப்புக்காக ரூ.1,161 கோடி ஒதுக்கீடு.

அயல்நாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு திறன் பயிற்சி மையங்கள் உதவி புரியும்.

பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்க தமிழர் கலாசார பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு.

பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய ஜெயக்குமார், சம்பளம், கல்விக்கான மானியமாக ரூ.46,331 கோடி ஒதுக்கீடு.

 விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7 ஆயிரம் கடனாக வழங்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக சமச்சீர் நிதியம் உருவாக்கப்படும். மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கான சட்டத்தினை மாநில அரசே ஏற்கும். •••• நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக உள்ளது. தமிழக அரசின் கடன் சுமை மார்ச் மாதம் 2018ம் ஆண்டில் 3,14,366 கோடியாக இருக்கும்.

நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருக்கும். நிதிநிலை அறிக்கையில் மொத்த வருவாய் செலவு ரூ.1,59,363 கோடியாகும்.


பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment