உத்தர பிரதேச மாநிலம், அலிகார் மாவட்ட கிராமம் ஒன்றில், 18 வயதிற்கு குறைவான இளம் பெண்கள், மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த, கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.
பசவுலி என்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாதபெண்கள், மொபைல் போன் பேசுவதை பார்த்தால், உடனடியாக அவர்களின் பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படும். அதாவது,
மொபைல் போனில் பேசிய இளம் பெண்ணின்
பெற்றோர், ஐந்து நாட்களுக்கு, கிராமச் சாலைகளை சுத்தம் செய்ய
வேண்டும் அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மொபைலில் பேசும் இளம் பெண்களை கண்டுபிடிக்க, கிராம
பஞ்சாயத்து சார்பில் குழு ஒன்றும்
அமைக்கப்பட்டு உள்ளது.