குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம்
வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி
நடைபெறுகிறது. இதில் பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத்
தேர்வு நடக்கிறது.
இந்தத்
தேர்வுக்கென 2 லட்சத்துக்கும்
மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக் கூட
நுழைவுச் சீட்டுகள் தயாராக உள்ளன. இந்த நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின்
இணையதளமான www.tnpsc.gov.in-ல்
வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்
தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment