'குரூப் - 4'
தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களில், இளநிலை உதவியாளர்,
தட்டச்சர் மற்றும்
சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி
அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்,
தட்டச்சர் உட்பட,
4,693
காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது;
10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது;ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சான்றிதழ்
சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து, தகுதி
பெற்றவர்களின் தேர்வெண் பட்டியலை, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
வெளியிட்டுள்ளது. அவர்களில்,
இளநிலை உதவியாளர் பணிக்கு,
நவ., 16; தட்டச்சருக்கு டிச., 4; சுருக்கெழுத்து நிலை -3 பதவிக்கு,
டிச., 14ல் கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை,
http://www.tnpsc.gov.in/results.html இணையதள இணைப்பில்
அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment