கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே, இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில், ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில், ஏப்., 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஜூன், 1ல் பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கோடை வெயில் வாட்டியதால், விடுமுறை காலம், ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்றுடன் கோடை விடுமுறை முடிவுக்கு
வருகிறது; நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு,
அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு,
நாளையே இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள்
வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment