May 22, 2017

லக்னோவில் இன்று முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது | kalvisethi news

      இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

       அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தாலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பங்குகளில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

முன்னதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு கடந்த வாரம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது.

உத்தரவை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் விதமாக லக்னோ போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களாக பயிற்சி அளித்து வந்தனர்.


கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment