May 17, 2017

போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ் !

சென்னை: தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக
ஒத்திவைக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு, 13-வது சம்பள கமிஷன் அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முதற்கட்டமாக நிலுவைத் தொகை ரூ.1000 கோடியை தர அரசு ஒப்புதல் அளித்ததால் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்.


*2ம் கட்டமாக ரூ.250 கோடியும், அடுத்து படிப்படியாக நிலுவைத்தொகை வழங்கப்படும் எனவும் அரசு உறுதி.

No comments:

Post a Comment