பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கொத்தவாசல் என்ற கிராமத்தில் தான்
தனியார் பள்ளிகளுக்கு டா..டா..காட்டினர் இந்த ஊரின் மக்கள்.
உடனே அத்தகைய கல்வியை நமது பள்ளியிலேயே
ஏன் உருவாக்கக்கூடாது என நினைத்த அவர் அதற்கான வசதிகளை உருவாக்க கடுமையாக
போராடினார்.தனது சொந்த செலவில் ரூ.1,68,000ஒன்பது கணினிகள்,Projector
போன்றவற்றை வாங்கி கணினிவழிக்கல்வியினை
ஏற்படுத்தினார். பல புரவலர்களை நாடி அவர்களின் உதவியால் மேலும் பல கணினிகள் பெற்று
மொத்தம் 15 கணினிகளை உருவாக்கி தினமும்
குழந்தைகளுக்கு பயிற்சியளித்தார். காணொளி காட்சி மூலம் வகுப்புகள்,ஆங்கிலத்தில் பேச்சு
பயிற்சியும் வழங்கி படிப்படியாக குழந்தைகளை மெருகூட்டினார்.இதுவரை இல்லாத அளவிற்கு
மிகச்சிறந்த முறையில் முதல் முறையாக கல்வித்திருவிழாவினை ஏற்படுத்தி குழந்தைகளின்
அசத்தலான ஆங்கில அறிவினையும், திறமைகளையும் கிராமத்து மக்களுக்கு
எடுத்துக்காட்டினார்.
குழந்தைகளின் திறமைகளைக் கண்ட
பெற்றோர்கள் அந்த மேடையிலே புரவலர்களாக மாறி ரூ.1,59,000 பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்தனர்.கோடை வெயிலினையும்
பொருட்படுத்தாமல் அனைத்து ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில்
ஈடுபடுபட்டார்கள்.அதன் விளைவுதான் தனியார் பள்ளிக்கு ஒட்டுமொத்தமாக
டா...டா...காட்டினர் ஊர்மக்கள்.இன்று வரை தனியார் பள்ளியில் படித்த 49 குழந்தைகள் அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டனர். மாணவர் சேர்க்கையில் 100% மட்டுமல்லாமல் இப்பள்ளியில் பசுமைத்தோட்டம் அமைத்து அதில் விளைகின்ற
காய்கறிகளை மதிய உணவிற்கு பயன்படுத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி பல்வேறு வகையான
துறைகளில் சிறந்து விளங்கியவர்களை அழைத்து எழுத்துப்பயிற்சி ,கராத்தே போன்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.ஒரு ஆசிரியரின்
சீரிய சிந்தனை ,கடின உழைப்பு சிகரத்தையும் தொட
முடியும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக உள்ளது.வானம் தொட்டு விடும்
தூரம்தான்......!!!
No comments:
Post a Comment