முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து
பெண்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது.
இந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில்
நேரடியாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்று தவணையாக வழங்கப்படும்
இந்த தொகை மகப்பேறு பதிவு செய்தவுடன் 1000 ரூபாயும்
இரண்டாவது தவணையாக 6வது மாதத்தில் 2 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்ததும் மூன்றாவது தவணைத்
தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள
பெண்களுக்கும் இந்த உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி
1 முதல் மார்ச் 31, 2020 வரை மாநில அரசின் பங்கு உடபட
மொத்தம் 12,661 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு
செய்யப்படும் என்றும் அதே காலகட்டத்தில்
மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 7932 கோடி ரூபாயாக
இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment