பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப்
பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்படாது. மதிப்பெண்கள் மட்டுமே வெளியாகும்
என்று
அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்வுகளில் வழங்கப்படும்
ரேங்க் முறைகளில் மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாகவும், பள்ளிக் கல்வித்துறை இதற்கான முறையான அறிவிப்பை அதிகாரபூர்வமாக இன்று
மாலை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
செய்தியாளர்களிடம்கூறுகையில், ''தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்
போது மாநில அளவில், மாவட்ட அளவில் முதல், இரண்டு, மூன்று என்றுதேர்வு முடிவுகள்
அறிவிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இனி அது கைவிடப்படும்.
இதே நடைமுறை மத்திய அரசால்
நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனெனில் முதல்,
இரண்டு, மூன்று என தேர்வு பெறும் போது, மற்ற மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட மன அழுத்தம்
ஏற்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படக் கூடாது என்ற
நோக்கத்தில் கைவிடப்பட்டுள்ளது.பெற்றோர் தங்கள் பிள்ளைகள் முதலிடத்தில் பெற
வில்லை என்ற ஏக்கத்தை தீர்க்கவும், மாணவர்கள் கல்வித்துறையில் சமநிலையில்
நடத்தப்பட வேண்டும் என்பதற்காக கல்வித்துறைஇந்த முடிவுகளை எடுத்துள்ளது. இதற்கான
அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் வழிக்கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு எண்ணிக்கை
அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இது
எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாகும். மக்களும், மாணவர்களும் வரவேற்பார்கள் என கருதுகிறேன்.பிளஸ் 1 பாடத்திட்டத்தை பொறுத்தவரை, முதல்வருக்கு இது தொடர்பாக பவர் பாயின்ட் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவரும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இன்று நடந்த இது
தொடர்பான கூட்டத்திலும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது பாடத்திட்டம்
அரசின் பரிசீலனையில் உள்ளது'' என்று அமைச்சர் செங்கோட்டையன்
கூறினார்.
தமிழகம், புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு
முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் ரேங்க் முறை கடைபிடிக்கப்படாது
என்று கூறியுள்ள அறிவிப்பை கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment