சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு
முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, '104' சேவை மையத்தில்,
மாணவர்கள், பெற்றோர் என, 4,000 பேர் ஆலோசனை பெற்றனர். பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று
வெளியாகின.
இதையொட்டி, '104' சேவை மையத்தில், மாணவர்கள், பெற்றோருக்கு சிறப்பு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று மாலை, 5:00 மணி வரை, 4,000 பேர் மருத்துவ சேவை மையத்தில் ஆலோசனை பெற்றுள்ளனர்.
இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மதிப்பெண் குறைவு, நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும்
திருப்தி இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களுக்காக, மாணவர்கள், பெற்றோர் என, 4,000 பேர் ஆலோசனை பெற்றனர். இதில், தேர்வில் தோல்வியடைந்த, 220 மாணவர்களுக்கு
உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டன' என்றனர்.
No comments:
Post a Comment