ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம்
முழுவதும் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வை சுமார் 7 லட்சம்
பேர் எழுதுகின்றனர்.இந்தத் தேர்வால்
எந்தப் பயனும் இல்லை என்றும்,
குளறுபடியும்,லஞ்சமும் தலைவரித்தாடும் சூழல் உருவாகும் என்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம்
வகுப்பு முதல் 10 வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும்
பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி
பெற்றிருக்கவேண்டும்.அவ்வாறு வெற்றி பெற்றால்தான் அவர்கள் அரசுப் பள்ளி மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப்
பணியாற்ற முடியும் என்ற விதிமுறை உள்ளது. தகுதித் தேர்வை எழுதி வெற்றி
பெறுவதற்கானக் காலக் கெடுவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்துள்ளது.
லஞ்சம் பெறவே இந்த தேர்வு..
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்
தகுதித் தேர்வை தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் எழுதுகின்றனர்.தாள் ஒன்றை
இடைநிலை ஆசிரியர்களும், தாள் இரண்டை பட்டதாரி ஆசிரியர்களும்
எழுதுகின்றனர். தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு கேள்விகளும்,சந்தேகங்களும் எழுகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர்கள் கூட்டணியின் மாநிலத்தலைவர் மோசசிடம் பேசிபோது,"இது போன்ற அப்பத்தமான தேர்வு என்று வேறு எதுவும் இருக்க
முடியாது.ஆரம்பத்தில் இருந்தே இந்தத் தேர்வை ஆதாரப்பூர்வமாக எதிர்த்து வருகிறோம்.
வட மாநிலங்களில் பி.எட் படிப்பு இல்லை என்பதால் இந்தத் தேர்வை மத்தியக் கல்வி
வாரியம் பிரின்ஸ் கஜேந்திரபாபு
கொண்டுவந்தது.அவர்களுக்கு இந்தத் தேர்வு தேவையாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லாத ஒன்று.
இத்தேர்வில் இருந்து மாநிலக் கல்வி
வாரியங்களுக்கு விலக்கு தேவை என்றால் அதனை அந்தந்த மாநில அரசு நடைமுறை படுத்திக் கொள்ளலாம் என்று
ஏற்கனவே மத்திய அரசு கூறியுள்ளது. அப்படி
இருக்கும்போது பிடிவாதமாகதமிழக அரசு இந்தத் தேர்வை நடத்துவது லஞ்சம் பெறுவதற்கு
மட்டுமே வழிவகை செய்யும். கடந்த முறை தேர்ச்சி பெற்றவர்களே ஆயிரக்கணக்கானோர் பணியில் சேராமல் காதித்திருக்கின்றார்கள். இந்த
நிலையில் எதற்காகமீண்டும் தேர்வு" என்றார்.
தேர்வு தகுதி படைத்துவிடாது ....!
இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ்
கஜேந்திர பாபு பேசுகையில்,"இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான்
கபிலன் ஆசிரியராகப் பணியாற்ற தகுதி இருக்கிறது என்றால் பி.எட் படிப்பும்,ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் எதற்கு? நேரடியாக அப்படியே தகுதித் தேர்வைவைத்துக் கொள்ளலாமே? வெறும் நினைவாற்றலைச்
சோதிப்பதற்கான தேர்வாகத்தான் அரசு இதனை நடத்துகிறது.மார்ச் மாதம் முழுவதும்
மாணவர்களைத் தேர்வில் பங்கேற்க தயார்ப்படுத்துவதற்கான வேலைகளில் ஆசிரியர்கள்
இருப்பார்கள்.அப்படி இருக்கும் போது இந்தத் தேர்வுக்கு அவர்களால் எப்படித் தயாராக
முடியும்? இந்தத் தேர்வை வைத்து ஆசிரியராக இருக்க
இவர் தகுதியானவர் என்று நாம் முடிவுக்கு வந்த விட முடியாது.கல்வியலில் பட்டயமும்,பட்டமும் பெற்ற பிறகுஆசிரியர் தகுதித் தேர்வு என்ற ஒன்றை நடத்துவது
அவசியமில்லாதது" என்றார் .இது தொடர்பாக இந்தத்தேர்வை எழுதி தோல்வி அடைந்து
தற்போது ஆசிரியராகப் பணியாற்றி வரும் கபிலனிடம் பேசிய போது,"தகுதித் தேர்வு என்பது சமூக
நீதிக்கு எதிரானது.
இந்தத் தேர்வில் ஏராளமான குளறுபடிகள்
உள்ளன.இதுவரை நடந்த தேர்வுகள் அனைத்தும் குளறுபடியாகத்தான் இருந்துள்ளது. தேர்வு முறையில் வெயிட்டேஜ்
மதிப்பெண் முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.அதனால் திறமையுள்ளவர்கள் பெரிதும்
பாதிக்கப்படுகிறார்கள் ..குளறுபடித் தேர்வு என்று தான் சொல்ல வேண்டும் ...10,12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் வாங்கிய மதிப்பெண்களை " வெயிட்டேஜ் மதிப்பெண்கள்" என ஆசிரியர் தகுதித்தேர்வில்
மதிப்பிடுகின்றனர்.இதனால்ஒரு மாணவனுடைய திறன் என்பது மாறுபடுகிறது.
இப்போது சிறப்பாக தேர்வு எழுதியவர்கள்
கடந்த கால பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள்
எடுத்திருப்பார்கள்.இதனால் வெயிட்டேஜ்மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.தேர்வுக்காக
நன்றாகப் படித்தும் அந்த மாணவனால் தேர்ச்சி பெற முடியாதநிலை உள்ளது. தகுதித்
தேர்வு என்பதைவிட இதனைக் குளறுபடித் தேர்வு என்றுதான் சொல்ல
வேண்டும்"என்றார்.
ஆசிரியருக்குத் தகுதித்தேர்வு என்றால்,
இத்தனை நாட்கள் அவர் தகுதியுடன் இல்லையா ?என்ற கேள்வியை எழுப்புகிறது.அதுமட்டுமன்றி தேர்வு எழுதாமல் ஆசிரியராக
பணியாற்றி வந்த ஆசிரியர்களிடம் பயின்ற மாணவர்களும் பரிசோதனைக்குரியவர்களா என்ற கேள்வியும் இங்கே எழுப்புகிறது ..!
No comments:
Post a Comment