சென்னை: தமிழகத்தில், அனல் வெயிலில் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அரசு எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:
* ஏப்., 21 முதல், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை கால சிறப்பு வகுப்புகள்
நடத்த வேண்டாம். உயர் கல்வி நிறுவனங்களில், தேர்வு எழுதும் மாணவர்கள், வெப்ப அலையால்
பாதிக்கப்படாமல் இருக்க, சிறப்பு பஸ் வசதிகள் ஏற்படுத்த
வேண்டும்.
* பொது மக்களுக்கு, மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெப்ப அலையால்
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தேவையான மருந்து பொருட்களை, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
* கால்நடைகளுக்கு தேவையான குடிநீர்
மற்றும் மருந்துகள், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
* கட்டுமான பணியாளர்களுக்கு அளிக்க
வேண்டிய அறிவுரைகள் மற்றும் முன் எச்சரிக்கைகள் குறித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
* நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக
வளர்ச்சி துறைகள் மூலம், பொது மக்கள் கூடும் இடங்களில், நிழல் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்
* ஊரக வேலை வாய்ப்பு திட்ட
பணியாளர்களுக்கு, குடிநீர் மற்றும் நிழல் பந்தல் வசதி
ஏற்படுத்த வேண்டும்
* அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில், வெப்ப அலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கான
செயல் திட்டம் தயாரித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தலைமை செயலர் அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment