ஏப்ரல், 30 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை
விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு,
பொதுத்தேர்வு முடிந்து,
விடைத்தாள்கள்திருத்தப்படுகின்றன.
10ம் வகுப்புக்கு, மதிப்பெண் தொகுப்பு பணிகள் நடந்து
வருகின்றன.தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள்
நடத்தப்படுகின்றன.வரும், 29ல் தேர்வுகள் முடிவதாக இருந்தன. ஆனால்,
முன்கூட்டியே தேர்வை முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், வரும், 29 மற்றும், 30ல், 'டெட்' தேர்வுகள் நடக்க உள்ளதால், அதில்
கண்காணிப்பாளர் பணி, விடைத்தாள் கட்டுகளை சேகரித்தல்,
பாதுகாத்தல் மற்றும் திருத்தும் பணிகள் நடக்க
உள்ளன. எனவே, ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக்
கூடாது என, மாவட்ட கல்வி அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment