அங்கீகார விதிகளை மீறி, தில்லுமுல்லு செய்த 13 பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., கண்டுபிடித்துள்ளது. தமிழகத்தில்,
ஒரு பள்ளி சிக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ.,
அங்கீகாரம் பெற்று, தமிழகத்தில், ௬௬௦ பள்ளிகள் உட்பட, நாடு
முழுவதும், 18 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.
அதிக கட்டணம் : மேலும், பல பள்ளிகள், மெட்ரிக்கில் இருந்து, சி.பி.எஸ்.இ.,க்கு மாற தயாராகி வருகின்றன. இவ்வாறு
மாறும் பள்ளிகள், எதற்கும் கட்டுப்படாமல், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியம், ஒவ்வொரு மாநிலத்திலும், சில பள்ளிகளில்
திடீர் ஆய்வு நடத்தியது. அப்போது, பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்தது தெரிய
வந்துள்ளது.
எச்சரிக்கை : இதனால், தமிழகத்தில், திண்டிவனத்தில் உள்ள, தாகூர் சீனியர் செகண்டரி பள்ளி உட்பட, 13 பள்ளிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், 'நோட்டீஸ் கிடைத்த, 30 நாட்களுக்குள் சரியான பதில்
தராவிட்டால், சி.பி.எஸ்.இ., வாரியம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட முறைகேடுகள்?
l பல பள்ளிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், முதல்வர்,
நுாலகர், ஆய்வகப் பணியாளர்
இல்லை
l தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தவில்லை
l நுாலகம், ஆய்வகம், போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லை. பள்ளி
அமைந்திருக்கும் நிலம், இரண்டு பிரிவுகளாக உள்ளது; போதிய
பாதுகாப்பு வசதிகள் இல்லை
l ஆசிரியர்கள் முறையாக தேர்வு
செய்யப்படவோ, நியமனம் செய்யப்படவோ இல்லை. அரசு
விதிகளின்படி, ஊதியம் வழங்கப்படவில்லை
l மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை
சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை
மேற்கொள்ளப்படவில்லை
l ஆசிரியர்களின் எண்ணிக்கை போலியாக,
சி.பி.எஸ்.இ.,க்கு வழங்கப்பட்டுள்ளது
l சில பள்ளிகளில், அனுமதியின்றி, மாணவியருக்கு தனிப்பிரிவு வகுப்புகள்
நடத்தப்படுகின்றன
l நடுநிலைப் பள்ளி அங்கீகாரம் பெற்று,
பிளஸ் 2 வரை மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்
l போதிய விளையாட்டு மைதானம் இல்லை;
தரமான குடிநீர், தீ தடுப்பு, சுகாதார வசதிகள்
செய்யவில்லை. இது போன்று பல
தில்லுமுல்லுகள் தெரிய வந்துள்ளன.
No comments:
Post a Comment