அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி
தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
'அரசு, உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்
நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர்
கூறியதாவது: 'குறுகிய கால அவகாசம் கொடுத்து, ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும்' என, அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க
முடியாது. ஏழு ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை
கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் பள்ளிகளில், TET தேர்ச்சி இல்லாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 'சிறப்பு பணியிடை பயிற்சி' அளித்து பணியில்
தொடரவும், தேர்ச்சி மதிப்பெண் 82 எனவும் உத்தரவிட்டது போல், உதவிபெறும்
பள்ளிகளில் 23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட
ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த 2013 முதல் தேர்வே நடத்தாமல் திடீரென இப்போது அறிவித்து, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை பரிசீலனை செய்ய
வேண்டும். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment