வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார்
எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்)
பெறவும்
ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல்
செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த
நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆதார் எண்ணையும் பதிவு செய்வதன் மூலம், வரி செலுத்துபவரின் வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகளை எளிதாக பின்தொடர வாய்ப்பு ஏற்படும் என மத்திய
அரசு கருதுகிறது.
இதற்கான வருமான வரிப் படிவத்தில்
தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என
மத்திய அரசு வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் நிர்ந்தர கணக்கு எண் (பான்)
பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது. வருமான வரிப் படிவத்தில்
கணக்கு தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டியது ஏற்கனவே
கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment