What's
up.. அட்மினா நீங்கள்...? மிரட்டல் வருகிறது உஷார்.....
சமூக வலைத்தளங்கள் மூலம் நொடி பொழுதில்
அனைத்து விவரமும் நம் கண் முன்னே கொண்டு வந்து சேர்க்கிறது. அதிலும் குறிப்பாக
பேஸ்புக்,வாட்ஸ்ஆப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்ற அளவிற்கு தற்போது
தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது .
வாட்ஸ் ஆப்
வாட்ஸ் ஆப் செயலியை பொறுத்தவரை அதில்
பல ஆப்ஷன்ஸ் இருந்தாலும். வாட்ஸ் ஆப் குரூப் ஆப்ஷனை தேர்வு செய்து , நமக்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவரையும் அதில்
இணைக்கிறார்கள் .ஒரு கட்டத்தில் எதாவது ஒரு சூழ்நிலையில் சில பல பதிவுகளின்
காரணங்களால் வாக்குவாதம் தலையெடுக்க, பிரச்னை
பெரிதாகி தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால்
பாருங்களேன் .
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், நிகில் கடே என்பவர் சிலநாட்களுக்கு
முன் வாட்ஸ் ஆப்பில் ஒரு புதிய குரூப் தொடங்கி அதில் 4 பேரை உறுப்பினராக சேர்த்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக
சீர்த்திருத்தம் குறித்த சில கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது .
இந்த பதிவு மீதான கருத்து வேறுபாடு
காரணமாக ,சண்டை முற்றி குரூப்பில் உள்ள மற்ற
நபர்கள்,குரூப் அட்மின் நிகிலுக்கு மிரட்டல்
விடுத்துள்ளனர் .பயந்து போன நிகில் தன் வீட்டை விட்டு , வெளியேறியுள்ளார். மிரட்டலுக்கு பயந்து தலைமறைவாக இருந்த நிகிலை
போலீசார் தேடியுள்ளனர். முடிவில் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டதாக
விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அந்த குரூ
ப்பில் உள்ள 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . இந்த சம்பவம் அனைவரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . எனவே வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் போது கவனமாக
கையாள்வது நல்லது..
No comments:
Post a Comment