ஜிப்மர் செவிலியர் பணி வினாத்தாள்
வெளியான விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில வாலிபர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.
தேர்வு அறைக்குள் பேனா, அலைபேசி, பர்ஸ் உள்ளிட்ட எந்த பொருளும்
அனுமதிக்காத நிலையில் வினாத்தாள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.ஜிப்மர்
மருத்துவமனை நடத்திய விசாரணையில், அரும்பார்த்தபுரத்தில் உள்ள தேர்வு
மையத்தில் தேர்வு எழுதிய இருவர், அலைபேசி மூலம் வினாத்தாளை புகைப்படம்
எடுத்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளது தெரியவந்தது. இருவரையும் தகுதி நீக்கம்
செய்த ஜிப்மர் நிர்வாகம், இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தது.ராஜஸ்தான்
மாநிலம், ஜோத்பூர் மசூரியாவை சேர்ந்த மனீஷ்
சவுத்ரி என்பவர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment