தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல்
எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து மத்திய அரசு தொலைதொடர்பு
துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய மொபைல் போன் இணைப்பு மற்றும் டெலிபோன் இணைப்பு
வழங்கப்படும்போது, அடையாளம் காண ஆதார் எண் வாங்கப்படுவது
வெற்றியடைந்துள்ளது. இதே முறையை அடுத்த ஓரு வருடத்திற்குள் தற்போது பயன்பாட்டில்
உள்ள போன் எண்களுக்கும் பயன்படுத்த வேண்டும். மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண்
இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து தற்போது
பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள்
வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018 பிப்ரவரிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்கு பின் மொபைல் போன் இணைப்பு
துண்டிக்கப்படும்.
No comments:
Post a Comment