Aug 5, 2016

படிச்சவன் பாடம் நடத்தறான்.. படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்தறான்..!!

பத்து ரூபாய் கேட்பவனை பிச்சைக்காரன் என்று கேவலப்படுத்தும் சமூகம், பல இலட்சம் கேட்பவனை மட்டும் மாப்பிள்ளை என்று கௌரவப்படுத்துகிறது...



ஒரிஜினல் எலுமிச்சையை காரில் நசுக்கிவிட்டுகெமிக்கல் எலுமிச்சையை குடித்து களிக்கிறோம்..!!

காது குத்தியதற்கான அடையாளமும்மூக்கு குத்தியதற்கான அடையாளமும்தெரிந்து விடுகின்றன.. ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை..!!

இங்கிலிஷ்ல பேசி வெள்ளைக்காரன் கம்பனில வேலை வாங்குறது பெருசில்ல..
தமிழ்ல ஒரு வார்த்தை கூட தெரியாம நம்மகிட்ட வேலை வாங்குற அவன் தான் பெரியாளு..

இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல..
கடவுள் மேல அம்முட்டு நம்பிக்கை..!!

நாக்கு ஒரு தீ! ஆக்கவும் அழிக்கவும் வல்லது.. கவனமாக பயன்படுத்துங்கள்..

படிச்சவன் பாடம் நடத்தறான்.. படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்தறான்..!!

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!

 250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும்இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க.. பசங்கத்தான் வேலைதேடி தெருதெருவா சுத்துறாங்க.. என்னடா டிசைன்!!

ஒவ்வொருவருக்கும் ஒரு முட்டாளின் உதவி தேவைப்படுகிறது.. தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்ள..!!

எந்த சூழ்நிலையிலும் நமது வாழ்க்கையில் இவர்கள் மூவரை மறக்க கூடாது..
1. கஷ்டத்தில் உதவியவன்..
2. கஷ்டத்தில் உதவாதவன்..

3. கஷ்டத்தை உருவாக்கியவன்.

gurugulam.com

No comments:

Post a Comment