பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு
புதன்கிழமை (ஜூன் 1) முதல் சனிக்கிழமை
(ஜூன் 4) வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
ஜூன் 29-ஆம் தேதி முதல் தேர்வு:
பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை தராத
மாணவர்களுக்கான சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த சிறப்பு
துணைப் பொதுத் தேர்வை எழுத, தாங்கள் படித்த
பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள்
தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலம் ஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க
முடியும்.
தேர்வுக்
கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்-லைன்பதிவுக்கட்டணம்
ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ. 175-ஐ ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகளிலேயே
பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வுக்கூட
அனுமதிச் சீட்டுகள் விநியோகம்: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர்
அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து
தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது
வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தாற்காலிகமானதுஎன்றும் தேர்வர்களின் விண்ணப்பம்,
தகுதி குறித்து ஆய்வு
செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள்
இயக்ககம் அறிவித்துள்ளது.
நேர அட்டவணை:
வினாத்தாள் படிக்க 9.25- 9.30 வரையிலும்,
பெயர் உள்பட விபரங்களை
சரிபார்க்க 9.25- 9.30 வரையிலும்,
தேர்வெழுத 9.30-
12 வரையிலும் நேரம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை:
ஜூன் 29 (புதன்கிழமை)-தமிழ்-1;
ஜூன் 30 (வியாழக்கிழமை)- தமிழ்-II;
ஜூலை 1 (வெள்ளிக்கிழமை)--ஆங்கிலம்-1;
ஜூலை 2 (சனிக்கிழமை) -ஆங்கிலம்-II;
ஜூலை 4 (திங்கள்கிழமை)-கணிதம்;
ஜூலை 5 (செவ்வாய்க்கிழமை)-அறிவியல்;
ஜூலை 6 (புதன்கிழமை)--சமூக அறிவியல்;
ஜூலை 8 (வெள்ளிக்கிழமை)--விருப்பப் பாடம்.