Apr 5, 2016

ஆசிரியர்கள் பற்றாக்குறை: பள்ளிக்கு பூட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த சங்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால் ஆசிரியர்

பற்றாக்குறை உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.



இந்நிலையில் இன்றுகாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளிக்கு பூட்டு போட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தினர்.