மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று
துவங்குகின்றன.பிளஸ் 2 தேர்வு, இன்று துவங்கி, ஏப்., 22 வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு இன்று துவங்கி,
மார்ச், 28ல் முடிகிறது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, அந்தமான் தீவு உள்ளிட்ட சென்னை
மண்டலத்தில், 2,150 பள்ளிகளைச் சேர்ந்த, 1.62 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வையும்; 57 ஆயிரம் பேர், பிளஸ் 2 தேர்வையும் எழுத உள்ளனர்.பிளஸ் 2வுக்கு, முதல் நாளில், ஆங்கிலத் தேர்வுநடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் நாளில், 'டைனமிக் ரீடெய்ல்' மற்றும் இந்திய சுற்றுலா, பாதுகாப்பு,
ஐ.டி., உள்ளிட்ட,
10 விருப்பப் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
முக்கிய பாடத் தேர்வுகள், நாளை( மார்ச் 2) துவங்க உள்ளன.