கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.126 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரத்து 368 மதிப்பில் மாணவர், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர்
தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2011
ஆம் ஆண்டு முதல் 2016 வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 79,141 மாணவர், மாணவிகளுக்கு ரூ. 118 கோடியே 28 லட்சத்து 93 ஆயிரத்து 977 மதிப்பில் விலையில்லா மடிக் கணினிகள், 6 லட்சத்து 42 ஆயிரத்து 995 மாணவர், மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 85 லட்சத்து 79 ஆயிரத்து 700 மதிப்பில் விலையில்லா பாடநூல்கள்,
3 லட்சத்து 94 ஆயிரத்து 322 மாணவர், மாணவிகளுக்கு ரூ. 5 கோடியே 91 லட்சத்து 48 ஆயிரத்து 300 மதிப்பில் பாடக் குறிப்பேடுகள், 6 ஆயிரத்து 140 மாணவர், மாணவிகளுக்கு ரூ. 2 கோடியே 12 லட்சத்து 42 ஆயிரத்து 91 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள், 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் மாணவர், மாணவிகளுக்கு தலா 4 செட் வீதம் வண்ணச் சீருடைகள் உள்பட 14
வகையான கல்வி உபகரணங்கள் ரூ.126 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரத்து 368 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன என
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.