தீபாவளி
பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு
பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து
மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்:
பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும்
வெடிப்போம்.
பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிப்போம்.
பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில்
தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்வோம்.
திறந்தவெளிகள்
மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
அதிக ஒலி
எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்போம்.
மருத்துவமனை,
பள்ளிகள் முதலானவை
அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
குடிசைகள்
மற்றும் எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க
மாட்டோம்.
ஒலியைக் குறைப்போம்,
செவியைக் காப்போம்.
கொண்டாடுவோம்,
கொண் டாடுவோம், விபத்தில்லா தீபாவளி யைக் கொண்டாடுவோம்.
மேற்கண்ட
உறுதிமொழியை எடுக்குமாறு பள்ளி மாணவ-மாண விகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment