Sep 2, 2015

பேருந்து மற்றும் ரயிலில் இனி இந்தியா முழுவதும் ஒரே அட்டையில் பயணிக்கலாம்.


இந்தியாவின் எந்த ஒரு ஊரிலும் உள்ள மெட்ரோ ரயில்கள் அல்லது வழக்கமான ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக பொதுவான ஒரு பயண அட்டையை அறிமுகப்படுத்த மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


அந்த அட்டை பயணத்திற்கு மட்டும் அல்லாமல் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மொபிலிடி கார்டு எனப்படும் இவ்வகை அட்டைகளை குறித்த காலத்திற்குள் அறிமுகப்படுத்தவும் இதற்காக மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இது போன்று பயண அட்டைகளை வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி இது தொடர்பான பணிகளை கவனித்து வருகிறது.​

No comments:

Post a Comment