பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்
த.சபீதா உத்தரவுப்படி பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க தமிழ்நாடு
முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.
பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கல்வித்தரத்தை
அதிகரிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அதிக நிதியை ஒதுக்கி உள்ளார்.
அதன்படி விலை இல்லா கல்வி பொருட் கள்
மாணவ-மாணவிகளுக்கு விலையின்றி கிடைத்து வருகிறது.இந்த நிலையில் கடந்த சில
வருடங்களாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முதன்மை செயலாளர் த.சபீதா அவ்வப்போது
கூட்டம் நடத்தி அதை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க
முடிவு செய்யப்பட்டது.இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கண்காணிப்பில்
ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment