🌴 அரசின் 25% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளியில்
முதல்வகுப்பிற்கு வரவேண்டிய சுமார் 89000 குழந்தைகள்
தனியார் பள்ளியில்
சேர்ந்துள்ளனர். இப்படி ஆண்டுதோறும் சென்றால் அரசுப்பள்ளியை மூட
வேண்டியதுதான்....
🌴 அரசுப்பள்ளிக்கு ஆபத்தாக இருக்கும் 25% இடஒதுக்கீடு, ஐந்தாம் வகுப்பில் திறமையான SC/ST
மாணவர்களை தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகளில்
படிக்க ஊக்குவிப்பது போன்ற திட்டங்களை அடியோடுகைவிட வலியுறுத்த
வேண்டும். சங்கங்கள் முயற்சி எடுத்து
அரசுப்பள்ளியின் எதிர்காலத்தை காக்கவேண்டும்
🌴 அரசின் திட்டங்கள் அரசுப்பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமே
தவிர , தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க கூடாது.
🌴 மூவாயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்
கான
மாணவர்களை அரசுப்பள்ளியில் சேரவிடாமல் செய்துள்ளது.
🌴 இவ்வாண்டு மட்டும் சுமாராக
இரண்டாயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் மாணவர் இல்லை என அரசு தொகுப்பில் சரண்
செய்யப்பட்டுள்ளன.
🌴 இதுபோன்ற ஆபத்தான திட்டங்கள் தொடராமல்
இருக்க சங்கங்கள் வலியுறுத்த வேண்டும்
No comments:
Post a Comment