பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 2014
மார்ச் முதல் கடந்த மார்ச் வரை சுமார் 1.98 கோடி சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதில்
லேண்ட் லைன் இணைப்பில் மட்டும் 20 லட்சம்
பேர் குறைந்துள்ளனர். எனவே, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில்,
வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் குறைந்தபட்ச
பிராட்பேண்ட் வேகம் தற்ேபாது நொடிக்கு 512 கிலோபைட் என இருப்பதை ஒரு நொடிக்கு 2
மெகாபைட்டாக (எம்பி) பிஎஸ்என்எல்
அதிகரித்துள்ளது. கூடுதல் கட்டணமின்றி இந்த சேவையை அளிக்கப்பட உள்ளதாக பிஎஸ்என்எல்
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம்
ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment